Wednesday 22 June 2016

பொக்கிஷம்

எப்படியாவது அது எனக்கு கிடைக்கவேண்டும்.

அந்த இளைஞனின் கண்ணில் உறுதி மின்னியது. உறுதியா? பேராசையோ?

இப்பொழுது சாத்தியமில்லை. கொஞ்சம் பொறுமை வேண்டும். நிச்சயம் கிடைக்கும். ஒரு வேளை வேறு யாருக்காவது… இல்லை. இந்த சின்ன ஊரில் எனக்கு போட்டியில்லை. அந்த பொக்கிஷம் எனக்குதான். அவன் மனதை படிக்க முடிந்திருந்தால் பார்ப்பவருக்கு பேராசை என்றே தோன்றியிருக்கும். உறுதி கலந்த பேராசை.

அதையே பார்த்துக்கொண்டிருந்தால்… வேறு யாருக்காவது அதே எண்ணம் வந்துவிடுமோ? சட்டென்று பொறமையும் ஒரு சின்ன அச்சமும் அவன் மனதில் உதித்த. சுற்றும் முற்றும் பார்த்தான். இவனையோ இவன் கண்ணை கவர்ந்ததையோ யாரும் கவனிக்கவேயில்லை.

சே சே, இந்த ஊரிலா? நமக்கு போட்டியேயில்லை.

சரி சரி மற்றதை கவனிப்போம்.

நாட்கள் நகர்ந்தன. சம்பவமற்ற வாழ்க்கை தொடர்ந்தது.

ஒரு நள்ளிரவு. நட்சத்திரங்களின் மங்கலான ஒளியில் வீடுகளின் நிழல்களும் மங்கலாகவே தெரிந்த. சின்ன ஊர்தானே. வசதிகள் குறைவே. ஏதோ கடமைக்கு உட்கார்ந்திருந்த அந்த போலீசுகாரருக்கு சலித்தது. நம்ம ஊரில் ஒன்றுமே சுவாரசியமாக நடப்பதில்லையே. 

சமூகத்துக்கு நல்லதுதான். ஆனாலும்... அவ்வப்பொழுது ஏதோ குடிகாரன் தெருவில் ஆட்டம் போடுவான். அவ்வளவுதான். அவனை கண்டுக்காமல் இருப்பதே மேல். திருடன் ஏதுமில்லை என்பது நல்ல விஷயம் தானே. நமக்கும் இதனால் நல்ல பெயர். இவன் காவலில் ஒன்றும் நடக்காது என்று மக்களுக்கு ஒரு நம்பிக்கை.

அதெல்லாம் சரி. ஆனால் எத்தனை நாள் இப்படி சும்மா பூனை மாதிரி விழித்துகிடப்பது. ஒரு கோப்பை… லேசாக புன்னகைத்தான். மனம் ஒரு குரங்கு. சும்மா இருக்கும் புத்தி விபரீதமாக எதை எதையோ நினைக்கும். மாநகரத்தில் இருந்தால் இப்படி தெருவெல்லாம் இரவில் வெறிச்சுக் கிடக்காது. நள்ளிரவிலும் அங்குமிங்கும் ஆள் நடமாட்டம் இருக்கும். அவர்களை பார்த்துக்கொண்டாவது ஏதாவது கற்பனை தேரை நடத்தலாம். இங்கு காற்றசைவே இல்லாமல் செடியை மரத்தையும் பார்த்து என்னதான்…

ஒரு உருவம் விறுவிறு என்று தூரத்தில் நடப்பது தெரிந்தது. அவனுக்கு தூக்கிவாரி போட்டது. பிரமையா? சட்டென்று எழுந்தான். இருட்டுமட்டுமே தெரிந்தது. உற்றுப்பார்த்தான். அதோ!! ஒரு ஆள் நடப்பது போல்? இல்லை இல்லை. அந்த திசையை நோக்கி நடந்தான். மங்கின இருளில் சரியாக தெரியவில்லை.

அதோ! ஆகா! நிழல்களுக்கு நடுவே ஒரு உருவம் விறுவிறுவென்று நடந்து சென்றது. குடிகாரன் இல்லை. இவன் யார் இரவு மூன்று மணிக்கு நடப்பது?

“நில்” – போலீசு குரலில் கம்பீரமாக சொன்னான். அவன் நிற்பதாக தெரியவில்லை. என்ன திமிர்! என்ன வேகமாக நடக்கிறான். அவன் தோள் மீது ஏதோ மூட்டைபோல்! நிச்சயம் திருடன் தான்!! விடாதே பிடி.

“டேய்! யாரங்கே? போலீசு! நில்! ஓடாதே, நில்!” கர்ஜித்தான். சட்டென்று அந்த உருவம் ஒரு தெருவில் திரும்பியது. தப்பித்துவிடுவானோ? ஐஐயோ! தைரியமான திருடன்! அவனை துரத்தி ஓடினான். மூச்சிரைக்க அவன் சென்ற தெருவில் திரும்புவதற்குள் மறைந்துவிடுவானோ?

இல்லை! அதே விறுவிறுப்புடன் அதோ நடக்கிறான். என்ன கர்வம்? என்ன மிடுக்கு? சின்ன ஊர் போலீஸ்காரன் என்ற ஏளனமா? மீண்டும் கத்தினான். “போலீஸ்! நில்! நில், சுட்டுவிடுவேன்!”

உருவம் நிற்பது போல் தெரிவதில்லை. வேறு வழியில்லை. துப்பாக்கி எடுத்து குறி பார்த்து சுட்டான். சத்தம் இரவை இடி போல் பிளந்தது. அந்த உருவம் உறைந்து நின்றது. 

அந்த பயமிருக்கட்டும்.

ஆனால் தோளில் உள்ள பொட்டலத்தை கீழிறக்கவில்லை. மூச்சிரைக்க வந்த போலிஸ்காரனுக்கு ஆத்திரம். திருடனின் மென்னியை பிடித்தான். “சுட்டா தான் பயம் வருமோ? எங்க ஓடற? என்ன பொட்டலம்?”

அந்த இளைஞன் அதிர்ச்சியில் பதிலேதும் சொல்லவில்லை. திருதிருவென்று விழித்தான். முதல் தடவை திருடன் போலிருக்கு. விறுவிறு என்று நள்ளிரவில் நடந்த மிடுக்கெல்லாம் துப்பாக்கி ஒலியில் கரைந்துவிட்டது. என்ன திருடியிருக்கான்?

“இறக்கி வை!” பொட்டலம் இறங்கியது.

“திற!” திறந்தான்.

புத்தகங்கள். பத்து பன்னிரண்டு புத்தகங்கள்.

அடச்சீசீசீசீ!

“என்ன இது?”

“புத்தகங்கள்”

“நள்ளிரவில் எந்த முட்டாள் புத்தகங்களை… இந்த வேளை எங்கே போகிறாய்?”

“வீட்டுக்கு”

போலீஸ்காரனுக்கு குழப்பம்.

“நடு ராத்திரி தான் வீட்டுக்கு போவது பழக்கமா?”

“ஆமாம். இப்பொழுது தான் வேலை முடிந்தது.”

“நான் நில் என்று கத்தினேன். ஏன் நிற்கவில்லை? உனக்கென்ன செவிடா?”

இளைஞனின் முகம் கொஞ்சம் தொங்கியது. “ஆமாம். நான் கொஞ்சம் செவிடு. துப்பாக்கி சத்தம் கேட்டுதான் நின்றேன்.”

பெருமூச்சுவிட்டான் போலீசுக்காரன். நல்ல வேளை, ஒரு அப்பாவியை சுடவில்லை. ஒரு குடும்பம் ஒரு மகனை இழந்திருக்கும். நானும் மன நிம்மதியை இழந்திருப்பேன். இந்த புத்தக மூட்டையை போய் ஏதோ பொக்கிஷம் என்று நினைத்து…

“நல்ல வேளை என் குறி தப்பியது. எங்கே உன் வீடு?”

“இதோ இங்கே தான்.”

“அதென்ன ராத்திரி இரண்டு மணி வரைக்கும் வேலை??”

“அது வந்து – தந்தி ஆபிஸ்.”

“ம்ம்ம்… உன் பெயர் என்ன?”

“எடிசன். தாமஸ் எடிசன்.”


பின்குறிப்பு  இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை. “எடிசனின் வாழ்வும் படைப்புகளும்” என்ற நூலில் லூயிவில் என்ற ஊரில் அவர் தந்தி தொழில் செய்த காலத்தில் இச்சம்பவம் நடந்தது.

தொடர்புள்ள பதிவுகள்
  1. எடிசனின் வால்மீகி
  2. எடிசன் வாழ்த்து
  3. வெள்ளைக்காரரா?
  4. செல்வத் திருநாள்
  5. சிலிகான் சிற்பி

Saturday 18 June 2016

தேவாரத்தில் பாரி

தேவார திவ்ய பிரபந்த பாடல்களில் சங்க காலத்தை பற்றி குறிப்புகள் ஏதுமில்லையே என்று பல நாளாக எனக்கு ஒரு வருத்தம். சங்க காலம் ஒன்றிருந்தது என்பதே மறக்கும் நிலைக்கு தமிழகம் வந்து, உ.வே.சா.வின் பணியால் அது வெளிச்சத்திற்கு வந்தது ஊரறிந்த கதை.

எத்தனை மீட்சிகள்?

சங்க காலத்து சான்றுகளாக ஒரு சில சமண பள்ளிகளும் அவற்றருகே சில பிராமி லிபியில் தமிழ் கல்வெட்டுகளும் மட்டுமே உள்ளன. ஒரு கோவிலோ, அரண்மனையோ, கட்டடமோ, சிற்பமோ, ஓவியமோ ஒன்றுமில்லை. இலக்கியம் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதிலும், தெலைந்தவை போக கிடைத்தவை சிலவே. சோகம் என்னவென்றால், தேவார பிரபந்த வரலாறுகளும் இப்படி தானே உள்ளன. தேவாரம் தொலைந்து விட, நம்பி ஆண்டார் நம்பி அவற்றை மீட்டதாகவும், ஆழ்வார் பாசுரங்கள் எனும் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொலைந்து விட, நாதமுனிகள் அவற்றை மீட்டதாகவும், சைவ வைணவ மரபுகளும் இலக்கியங்களும் நமக்கு சொல்கின்றன.

கிரேக்க இலக்கியத்தின் பாரசீக பாதுகாவலர்

ஐரோப்பிய வரலாறை பார்த்தால், சுமார் நான்காம் நூற்றாண்டில், ரோமாபுரியின் வீழ்ச்சிக்கும் கிருத்துவ மத எழுச்சிக்கும் பின், சாக்ரேடீஸ் அரிஸ்டாடில் காலத்து கிரேக்க இலக்கியங்களும் ஐரோப்பாவிலிருந்து தொலைந்து வழக்கொழிந்து விட்டன. மாசிடோனிய மாவீரன்அலெக்ஸாண்டர் காலத்தில் அரபு பாரசீக நாடுகளின் மேல் போர் தொடுத்து அங்கே கிரேக்க மொழியை ஆதிக்க மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் நிலை நிறுத்தினான். அவன் வழியே அவனுடைய குரு அரிஸ்டாடிலின் சிந்தனைகளும் ஹோமர், அரிஸ்டோபேனீஸ், தேலீஸ், யூரிபைடீஸ், பிளேட்டோ போன்றோரின் பண்டைய கிரேக்க இலக்கியங்களும் அறிவியல் நூல்களும் அரபு நாடுகளிலும் குறிப்பாக பாரசீகத்திலும் பரவலாக படிக்கப்பட்டன. 

முன்னூறு ஆண்டுகள் கிரேக்க மொழி இன்றைய இராக் இரான் பாகிஸ்தான் மத்திய ஆசியாவில் கோலோச்சியது. கிரேக்க மொழியிலும் சமஸ்கிருதத்திலும் அகதோகிளீஸ் போன்ற மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனர். சாம்ராட் அசோகன் டமாஸ்கஸ் நகரை ஆண்ட கிரேக்க மன்னன் ஆண்டியோகஸ்ஸிற்கும் எகிப்தை ஆண்ட தாலமிக்கும் தன் கொள்கைகளை தூதாக அனுப்பனினான். இதை அவன் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

ஆனால அசோகன் காலத்தில் வளர்ந்த சங்க இலக்கியத்தை பற்றி வடமொழியிலோ பிராகிருத இலக்கியங்களிலோ ஒரு தகவலும் இல்லை. நம் நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வந்த பொழுது நாம் அசோகனை, மௌரியரையும், குப்தரையும், சாதவாகனரையும், பல்லவரையும் மறந்துவிட்டோம். மிகப்பரிதாபமாக, அசோகனின் தூணை வீமனின் கைத்தடி என்று பண்டிதர்கள் தவறாக விளக்கியுள்ளனர்.

பாரசீகத்தை இஸ்லாமிய படைகள் வென்ற போதும், பின்னர் மங்கோலிய படைகள் தாக்கியபோதும், பாரசீகத்தில் கிரேக்க இலக்கியம் வழக்கொழியவில்லை; பாக்தாதிலும் இவை வழக்கத்திலிருந்தன. அந்நாட்டு சான்றோர் அவ்விலக்கியதை பாதுகாத்துவந்தனர். சுமார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் மீண்டும் இவ்விலக்கியங்களை படிக்கும் வாய்ப்பை பெற்றனர். இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும் வித்திட்டது. சைவ வைணவ இலக்கியங்களுக்கு நம்பி ஆண்டார் நம்பியும், நாதமுனிகள் செய்த தொண்டை, பாக்தத் பண்டிதரும், பாரசீக பண்டிதரும் கிரேக்க இலக்கியங்களுக்கு செய்தனர்.

சங்க இலக்கியம் – கால குழப்பம்

நிற்க. எது சங்க இலக்கியம் என்றே தெளிவில்லை. பதினென்மேல்கணக்கு எனும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மட்டுமே சங்க இலக்கியம் என்பது சிலர் வாதம். இவற்றின் இலக்கணத்தை விவரிப்பதாகவே தொல்காப்பியத்தை கருதலாம். திருக்குறள் நாலடியார் உட்பட பதினென்கீழ்கணக்கு எனும் நூல்களையும் சேர்த்து சங்க இலக்கியம் என்றும் சிலர் கூறுவர். சிலப்பதிகாரம் மணிமேகலை கூட சங்க இலக்கியம் என்மனார் சிலர். பத்துப்பாட்டு எட்டுத்தொகை தவிற மற்ற பிற களப்பிரர் காலத்தவை என்ற கருத்துமுண்டு. உறுதியான, மறுக்கமுடியாத ஒரு அட்டவணையை, இன்றும் ஒரு வரலாற்று ஆய்வாளரும் உருவாக்கவில்லை. 

தமிழ வரலாறு - ஒரு கால அட்டவணை

மகேந்திர வர்மனுக்கு (590 கிபி) பின் வந்த பல்லவர்களையும், விஜயலாயனுக்கு (850 கிபி) பின் வந்த சோழர்களையும், அதற்கு பின் தமிழகத்தின் வரலாற்றையும் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் வைத்து ஒரு சீரான கால அட்டவணையில் காட்டலாம். நீலகண்ட சாஸ்திரியின் தென்னிந்திய வரலாறு நூலிலும் பின்னர் தமிழக தொல்லியல் துறையின் நூல்களிலும் படித்தால் ஒரு கால அட்டவணை செய்யலாம். ஆனால் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழக வரலாறுக்கு ஒரு தெளிவான கால அட்டவணை இல்லை. வகுக்க முடியுமா என்பது சந்தேகம்.

சங்க காலம் என்னவென்றே விவாதங்கள் தொடர, எது சங்க இலக்கியம் என்பதில் விவாதம் தொடர்வது ஆச்சரியமில்லை. ஆனால் பொதுவாக, பக்தி இலக்கியங்களாகிய தேவார திவ்ய பிரபந்தங்கள் சங்க காலத்துக்கு பிந்தையவை என்பது பெரும்பாலோர் கருத்து. அப்படியானால் சங்க குறிப்புகள் ஏன் இவற்றில் இல்லை?

சங்க காலத்தில் தமிழகத்தில் நடந்த சிவனின் திருவிளையாடல்களும் அதற்கு முன்னரே நடந்த சிவனின் பல சாகசங்களும் (திரிபுரம் எரித்தல், பாற்கடல் எழுப்பிய நஞ்சுண்டல், ராவணன் வாலி அகத்தியன் சம்பவங்கள் போன்றவை) தேவரத்தில் இருப்பின், சங்ககால இலக்கியங்களில்  சிவன் கோவில்கள் ஏன் பேசப்படவில்லை? தேவார பிரபந்த பாடல்கள் சங்கக்காலத்திற்கு பின் இயற்றியவை என்றால் (அவற்றின் மொழியும் தமிழ்நடையும் யாப்பும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன), இடை வந்த களப்பிறர் காலத்தில் ஏன் களப்பிற மன்னர்களின் குறிப்புகள் ஏதுமில்லை?

பிரான்மலை

சென்ற வாரம் பிரான்மலைக்கு சென்றேன். நணபர் வெங்கடேஷ் ராமகிருஷ்ண்னின் மகன் அக்ஷய் திருமணத்திற்கு தேவகோட்டை செல்கிறேன் என்று சொன்ன வேகத்தில், நண்பர் திரு கண்ணன் அவர்கள், கட்டாயம் அதற்கு அருகிலுள்ள பாரியின் பிரான்மலையும் திருப்பாத்தூரும் பார்த்துவிடவும் என்று அன்பு கட்டளையிட்டார். வெங்கடேஷும் பிரான்மலையை புகழ அங்கே நண்பர் வைத்தியநாதன் ராமமூர்த்தி, என் தம்பி ஜெயராமன், அக்ஷயின் நண்பர் பரத்வாஜ் நால்வரும் பிரான்மலை சென்றோம்.

சங்க கால மன்னன் பாரி ஆண்ட ஊர் என்றும், பாரி மலை என்றோ பறம்பு மலை என்றோ பெயர்பெற்ற ஊர் பின்னர் பிரான் மலை என்று பெயர் மாறியது என்றும் தகவல்கள். சிவனே பிரான் என்று வேறு ஒரு தகவல். தொலைபேசியில் தொல்லியலாளர் முனைவர் பத்மாவதி சொன்னதைப்போல் - குடைவரை கோவில்! குடுமியான்மலை, அரிட்டாப்பட்டி, குன்றக்குடி போன்ற பழைய பாண்டிய குடைவரை கோவில்களில் பாறையிலேயே செதுக்கிய லிங்கம் இருக்கும். ஆனால் பிரான்மலையில் உமையுடன் நிற்கும் ஈசனின் திருவுருவம்! 

எழில் கொஞ்சும் பிரான்மலை

முக்கியமான வணிக கல்வெட்டுகள் இங்கு உள்ளன என்று முனைவர் பத்மாவதி கூறியிருந்தார். கண்ணில் பட்ட கல்வெட்டுகள் வணிக குறிப்பேதும் தெரியவில்லை. மதுரைமீட்ட சுந்தரபாண்டியனின் கல்வெட்டும் குலசேகரபாண்டியன் கல்வெட்டும் கோனிரன்மைகொண்டானின் கல்வெட்டும் மண்டபத்தில் தெரிந்தன. இந்த கல்வெட்டுகளில் திருக்கொடுங்குன்றம் என்றே இவ்வூர் வழங்குகிறது – பிரான்மலை அல்ல. மேலே நீலவண்ணம் பூசியிருந்தாலும் படிக்கமுடிந்தது. மூலவர் கோவிலுக்கு படியேறி மண்டபம் செல்லும் வழியில் இடது பக்கம் ஒரு அநாமதேயமான மண்டபத்தில், வரையில் (வரை=மலை) குடைந்த விநாயகர். 

குடைவரை விநாயகர்

குலசேகர பாண்டியன் கல்வெட்டு

குலசேகரன் கல்வெட்டு  ஸ்வஸ்த் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலைசேகர தேவர்கு யாண்டு 13வதி தேதி 14வது துலா (நரயற்று க்ருஷ்ண -??) பக்ஷத்து அஸ்வதி (?) நாள் திருமலை நாட்டுத் திருக்கொடுகுன்றத்துடையார் திருக்கொடுங்குன்றத்துடைய நாயநார்க்குத் திருநுந்தாவிளக்கெரிவதர்க்கு களக்குடிய நாட்டுக் களக்குடிய கோவிந்தபுரத்து பிள்ளையார் அழகப்பெருமாள் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவனி நாராயண தேவன் இட்ட விளக்கு நெய்…..

சுந்தரபாண்டியன் கல்வெட்டு


தேவாரத்தில் பாரி

மேலே மூலவர் சன்னிதியின் வாசலில் பாரியை பாடி கபிலர் இயற்றிய புறநானூற்று பாடலை 1968இல் செதுக்கிய கல்வெட்டு. வலது பக்கம் தேவார நால்வரின் செப்புத்திருமேனிகள். 

அதற்கு பின் சுவரில் சுந்தமூர்த்தி நாயனாரின் தேவாரம். இதோ :

மிடுக்கி லாதானை வீம னேவிறல்
    விசய னேவில்லுக்கு இவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று 

    கூறினும் கொடுப் பார்இலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக 

    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேலமர் உலகம் ஆள்வதற்கு 

   யாதும் ஐயுற வில்லையே

எள்ளிநகையாடும் இத்தேவாரப் பாடலில், பாரியே என்று புகழ்ந்தாலும் பரிசு கொடுக்கும் வள்ளல் யாருமில்லை என்று இரண்டாம் வரி சொல்லுகிறது. தேவார பாடலில் ஒரு சங்க கால மன்னன் வரும் பாடல் வேறேனும் நான் கேட்டதில்லை. வரலாற்று நூல்களில் இதை பற்றி பேச்சுமிருப்பதாக தெரியவில்லை. இருந்தால் சொல்லவும். 

தேவாரத்தில் பாரி

கபிலரின் புறநானூற்று பாடல்
பின்குறிப்பு

கோவிலிலுள்ள பல கல்வெட்டுகளின் மேல் சுண்ணாம்பும், நீலம், காவி, மஞ்சள் என்று வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. நுழைவாசல் மண்டபத்தில் கல்வெட்டில்லாத சுவர்களில் அதிவேக நீர்பாய்ச்சி (Water blasting)இந்த சுண்ணாம்பு வண்ணங்களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. கல்வெட்டுள்ள பகுதிகள் இப்படி அதிவேக நீர் பாய்ச்சி, கல்வெட்டுகளை அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். மீண்டும் வண்ணமோ சுண்ணாம்போ பூசாமல் இருக்கவேண்டும். சுத்தம் செய்கிறேன் என்று கல்வெட்டுகளை அழிக்கும் தமிழகமெங்கும் பல வருடங்களாக நடக்கின்றன.

மண்டபத்தில் கல்வெட்டுகள் - மேலே நீல வண்ணம்

படிகளில் கல்வெட்டுகள் - மேலே காவி வண்ணம்

Water blasting : நீர்பாய்ச்சி வண்ணம் அகற்றும் பணி

ஒத்த கட்டுரைகள்

  1. தமிழக கல்வெட்டுகள் : ஓர் அறிமுகம் – மார்க்சியா காந்தி - காணொளி
  2. Tamilnadu and Karnataka - Dynasty timelines
  3. Tamilnadu and Gujarat - Dynasty timelines
  4. தமிழ் நாடக இசை
  5. தும்பியின் ஏளனம் - கவிதை
  6. கோயில்களில் விண்ணியல் 

பிரான்மலையில் : கோபு, ஜெயராமன், வைத்தியநாதன், பரத்வாஜ்

Monday 6 June 2016

Keezhadi excavation

Amaranath Ramakrishnan,  archaeologist of ASI lectured about the Keeladi excavation which he initiated and is supervising. These are my notes of his speech at Tamil Virtual Academy, Kotturpuram, Chennai.

Tamilnadu Archaeology overview

No serious systematic excavation along Vaigai or Tamilnadu since Alexander Rea in 1880. Occasional expeditions in Kallupatti, Mangulam. Only major ASI dig at Kaveripoompattinam. Alagankulam is the one rare site undertaken by TN state archaeology department.

170 habitation sites found by ASI Bangalore division in the last few years. Including Keeladi, Allinagaram, Enadi, Maranadu with Buddha sculpture (but called Muniyandi), Rajagambiram, Pandikanmay. Most sites are on the South Bank of Vaigai which is lower and hence, fertile.

Burial sites also found too besides habitation sites. Burial sites are never on fertile soil.

Several sites have been lost to real estate and other development.

Stone arrangements are North-south and East-west in Vembur. This is the first such site found in Tamilnadu. Such sites have been discovered in Andhra Karnataka earlier.

Gold bars with Tamil Brahmi (with name Kothai) were found. First gold bar discovered in Tamilnadu. Deposited with Collectorate.

More recent objects

Arabic sluice gate inscription of 17th century. Hero stones, with vattezhuthu, Pandyan era Durga, Jain and Buddhist statues at Arungulam and Kilparthibanur.

Of more recent vintage, (i.e. late Pandya) Karungalakkudi stone temple on the way from Madurai to Nedungulam with Sundara Pandya inscription! Kallikottai Siva temple also discovered!!

Keezhadi

Keezhadi (or Keeladi) now in Siva Ganga district, called Kuntidevi chaturvedi mangalam, after a Pandya queen. Perhaps it is the Kondagai village nearby. 

Puliyur Nambi of 13th century Tiruvilayadal Puranam says old Madurai was near Manalur, which is near Keeladi. It is 80 acres in area.

Bricks of three sizes found. Similar bricks found in Kanchi and Arikamedu. Handmade grooved tiles probably tiled roof, found. Ring well, pottery - for utensil not burial- found in brick dwellings stratigraphically.

Lots of antiquities - all finished goods - found; also coins figurines, glass and pearl beads, iron objects, bone point stylus actually horn, ivory dice, gamesmen, discs and terracotta wheels, Brahmi on pottery sherds with the words Thisan Uthiran Adhan Iyanan Surama. Graffiti pottery sherds also found.

Tamil history is stuck at 3rd century BC. Rajan's dating of Kodumanal as fifth century BC not accepted by anyone.

Nearly one lakh students visited. We allowed them and explained things to them.

Comments by Gopu
I can't find the video of this talk by a Google search. If some one provides a link, I will post the link here. I post this blog because newspaper reports seem more sensational than informative.

Mr Amarnath Ramakrishnan's passion and earnestness came through in the talk. If Keeladi is Sangam settlement like he claims, it is fascinating and important. It is remarkable that most of the sites found earlier were burial sites, not residential areas.

His comments on real estate development are valid. Once land is built up, archaeology is unlikely. I am surpised that there isnt a more active set of excavations around Gangaikonda Cholapuram. 

I hope they commence a proper excavation at Gunduperumbedu also for the same reason. Prof Dayanandan of  MCC, Tambaram expressed this opinion to me in a recent chat.

Other Blogs on Archaeology

A Dholavira surprise
Gunduperumbedu - Creataceous site near Madras