Tuesday 12 April 2016

மதராசபட்டினம் நூல் விமர்சனம்


காந்தி கல்வி நிலையம் நடத்தும், இந்த வார புதன் கிழமை (13.04.2016) கூட்டத்தில் “மதராசப்பட்டினம்" என்ற திரு. நரஸய்யா அவர்களின் புத்தகத்தை அறிமுகம் செய்து பேசுகிறேன். சென்னை தியாகராய நகரில் வெங்கட்நாராயணா சாலையில், தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில், (நந்தனம் சிக்னல் அருகே) காந்தி கல்வி நிலையம் பல வருடங்களாக புதன்கிழமைகள் தோறும் புத்தக கலந்துரையாடல் நடத்துகிறது.

நேரம்: மாலை 6.45 முதல் 7.45 வரை

ஒரு நகரத்துக்கும் வரலாறு எழுதமுடியுமா? எழுதினால் யார் படிப்பார்கள்? இந்தியருக்கும் தமிழருக்கும் வரலாற்று உணர்ச்சி ஏதும் இல்லை என்று மேற்கத்தியர் பலரும் கருத, நெடிய வரலாற்று நூல்களை படிக்கவே ஆளில்லாத போது, இந்த ஊரில் சொல்ல என்ன உள்ளது?
வரலாற்று பேராசிரியர்களோ மற்ற எழுத்தாளர்களோ எழுதாத போது ஒரு கப்பல் துறை பொறியாளர் ஏன் இந்நகரத்து வரலாற்றை எழுதவேண்டும்?

மதறாஸ்? சென்னை? ஆங்கிலேயர்  கட்டிய நகரமா இந்திய நகரமா தமிழ நகரமா? மதுரைக்கும் தஞ்சைக்கும் காஞ்சிக்கும் இல்லாத புகழ் ஏதோ சென்னைக்கு உண்டா?
கொல்கொத்தாவும் பம்பாயும் அல்லவா உலக புகழ் பெற்ற நவீன் மாநகரங்கள் – சென்னை எம்மாத்திரம்?

என்னத்தான் இருக்கிறது சென்னையை பற்றி எழுத? 

நூலில் நரஸய்யா சொல்லும் விவரங்களை புதன்கிழமை எடுத்துச்சொல்வேன்.

மதராசபட்டினம் வலைப்பதிவுகள்

போர்க்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர்
போர்க்காலத்தில் சென்னை - முதல் உலகப்போர்
ரா அ பத்மநாபன் அஞ்சலி


புத்தக விமர்சன வலைப்பதிவுகள்

No comments:

Post a Comment