Sunday 27 December 2015

தமிழ் நாடக இசை


டி.கே.எஸ் கலைவாணன்  இசைக்குழுவினருடன்
இன்றைய கர்நாடக சங்கீதம் ஒரு சில இடங்களில் கச்சேரிகள் என்ற மிக குறுகிய ரசிகர் சமூகம் கொண்ட கலையாக சுருங்கி உள்ளது. நூற்றில் ஒரு சினிமா பாடலிலும், தொலைகாட்சி போட்டிகளிலும், ஒலித்து, ராகத்திற்கும் மெட்டிற்கும் வேற்றுமை தெரியாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
சினிமா யுகம் தொடங்கும்முன் தமிழகத்தில் மேடை நாடகங்களும் தெருக்கூத்துக்களும் வெகுஜன கலைகளாக கோலோச்சின. ஐரோப்பியரின் நாடகங்கள் இந்திய நாடகங்களில் ஒரு புது யுகத்தை தொடங்கின. பல ஆங்கிலேய நாடகங்கள் தமிழில் உருமாறி வந்தன. ஆனால் வள்ளித்திருமணம், ராமாயணம், மகாபாரத கதைகள், திருவிளையாடல், பழைய புராண கதைகள், காளிதாசன் தெனாலி ராமன் போன்ற கதைகளையே மக்கள் பெரிதும் வரவேற்றனர். முக்கியமாக பாடல்களின்றி நாடகமில்லை என்ற காலம் நிலவியது. 1960கள் வரை நிலவிய இச்சூழ்நிலை இன்று மிகவும் மாறிவிட்டது. தெருக்கூத்தில் தொடர்ந்து வரும் பாடல்கள், தமிழக நகரங்களில் மேடை நாடகங்களில் இருப்பதில்லை. இருபதாண்டுகளாக மெகா தொடர்களே கோலோச்சுகின்றன.

நாடக இசை பாடல்களில் கர்நாடக சங்கீதமும் பரவலாக இருந்தது. கேபி சுந்தராம்பாள், எம் கே தியாகராஜ பாகவதர், டி ஆர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் மேடை நாடக உலகிலிருந்து சினிமா உலகிற்கு வந்தவர்களே. பாகவதர் சின்னப்பா காலத்தில் படத்திற்கு நாற்பது பாட்டு சாதாரணம். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் வசனமும் சண்டைகாட்சிகளும் முன்னுக்கு வந்து பாட்டு பின்சென்றது. பின்னணி பாடகர் உதயமானார்.

பழைய சினிமாக்களில் நாம் கேட்கும் பாடல்களுக்கும் பழைய நாடகங்களில் பாடப்பட்ட ஒற்றுமையும் வேற்றுமையும் ஏராளம். சென்னை சங்கீத சபைகளில் மார்கழி மாதம் மேடை கச்சேரிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து வரும் சூழ்நிலையில், இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி(Indian Fine Arts Society) பத்து வருடகங்களாக நாடக இசைக்கும் ஒரு சில மணித்துளிகள் ஒதுக்கிவருகிறது. புகழ்பெற்ற நாடக மேதை ஔவை சண்முகத்தின் மகன் டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் வருடா வருடம் ஒரு நாள், அவர்களது அரங்கத்தில், சங்கரதாஸ் சுவாமிகள் முதல் ஔவை சண்முகம் வரை பாடப்பட்ட பல பாடல்களை பாடி காட்டி, அவற்றின் நுணுக்கங்கள், நாடக உலகிற்கு ஏற்ற விசித்திரங்கள், அவர்கள் பட்ட இன்ப துன்பங்கள், கலைஞர்களும் புலவர்களும் தங்களுக்கு அமைத்து கொண்ட பாணிகள், மக்களின் வரவேற்பு, எதிர்பார்ப்பு, போன்றவற்றை விளக்கி, தன் இசை குழுவுடன் பல பாடல்களை பாடி வருகிறார்.

ஒலிப்பெருக்கிகள் வருவதற்கு முன் பாடும் திறமையே நடிகருக்கு முக்கியமான தகுதி. அதுவும் ஆயிரம் பேர்கூடிய அரங்கில் நான்கு ஐந்து மணி நேரம் நடக்கும் நாடகங்களில் அயராமல் பாடவேண்டும். பெண்குரல்களை போல் உச்சஸ்தாயியில் பாடும் ஆண்கள் தேவைபட்டனர். எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் இவற்றில் முக்கியமானவர்கள். பெண்கள் பலரும் ஆடவர் வேடத்தில் நடிப்பதும், ஆண்கள் பெண் வேடத்தில் நடிப்பதும் சகஜம். கேபி சுந்தராம்பாளின் குரலும் வீச்சும் அவர் செல்வத்தின் மூலதனம். கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் சேர்ந்து நடிக்க, ஒரே நாளில் மாலை நாடகத்தில் கிட்டப்பா முருகனாகவும் சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடிக்க, இரவு நாடகத்தில் சுந்தராம்பாள் முருகனாகவும் கிட்டப்பா வள்ளியாகவும் வேடமேற்ற நாட்களும் உண்டு!

புராண நாடகங்கள் மிகவும் பிரபலமாக இருந்ததால், “காயாத கானகத்தே”, “தசரத ராஜ குமாரா” போன்ற சில பாடல்கள் மிக பிரபலமாயின.

மான் வேட்டை காட்சியில் மான் துள்ளும் வேகத்தில் பாடப்படும் பாடலை கலைவாணன் சொல்லி பாடி காட்ட எத்தனை முறைகேட்டாலும் சுவையும் சிரிப்பும் குறைவதில்லை.

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனை விட்டுவிடுவாரா கலைவாணன்? இதோ அவரை பற்றி.

நாடக கம்பெனிகள், நாடக சபைகள், போன்ற அமைப்புகள் முளைத்து வளர்ந்தன. இவைகளின் பெயர்கள் கூட சுவையானவ – கேளுங்கள்.

எல்லாம் இங்கே எழுதிவிட்டால் எப்படி?

டிசம்பர் 28 2015, திங்கள் காலை 10.30 மணிமுதல் 12.30 மணி வரை, டிடிகே சாலையிலுள்ள எத்திராஜ கல்யாண மண்டபத்தில் கலைவாணன் தமிழ் நாடக இசை பற்றி பேசி பாடுவார். வந்து ரசிக்கவும்.

பாடல்களின் சுட்டிகள்


போகுதுபார் அதிவேகமதாய் ஒரு மான்
அவ்வை சண்முகம்
எஸ் ஜி கிட்டப்பா
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்
நாடக சபைகளின் பெயர்கள்

தொடர்பான கட்டுரைகள்

Friday 18 December 2015

மாந்தாதா Mandhata

மாந்தாதா - அமராவதி சிற்பம் 
Mandhata panel - Amaravati gallery


मान्धाता च महीपतिः कृतयुगालङ्कारभूतो गतः
सेतुर्येन महोदधौ विरचितः क्वासौ दशास्यान्तकः।
अन्ये चापि युधिष्ठिरप्रभृतयो याता दिवं भूपते
नैकेनापि समं गता वसुमती मुञ्ज त्वया यास्यति।।

பொன்னியின் செல்வன் நாவலின் மணிமகுடம் அத்தியாயத்தில், கடம்பூர் அரண்மணையில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை கட்டியக்காரன் அறிவிக்கும்போது மநுமாந்தாதா என்று தொடங்க, “மநு சரி, அது யார் மாந்தாதா?” என்று ஐயம் எழுந்தது. சென்னை எழும்பூர் அமராவதி சிற்பங்களை காணுகையில் மாந்தாதா என்ற மாமன்னன் பெயர் கண்டு, இம்மன்னனுக்கும் பௌதத்திற்கும் என்ன தொடர்பு என்ற ஐயம் வளர்ந்தது. போஜ ராஜன் தன் ஒரு பாடல், இதே மாந்தாதாவின் பெயரில் தொடங்கியதை கண்டு, ஐயம் வெடித்தது. மகேந்திர வர்ம பல்லவனுக்கு கற்பனையிலும் கலை ஆர்வத்திலும் படைப்பாற்றலிலும் விசித்திர சிந்தனையிலும் போஜ ராஜனை மட்டுமே ஒப்பிடலாம் என்று பேராசிரியர் சுவாமிநாதன் முதல் கலை உலாவின் தொடக்கத்தில் சொன்னதும், நினைவுக்கு வந்தது.

நகுபோலியன் பாரதி பாலு இந்த கவிதையை விளக்கினார். போஜன் சிறுவனாக இருந்த பொழுது அவன் சித்தப்பன் முஞ்சன் அவனை கொன்று சிம்மாசனம் சிம்மாசனம் பறிக்க முயன்றதாக ஒரு கதை உண்டு. சூழ்ச்சியை அறிந்துகொண்ட போஜன், தப்பிவிட்டு, இந்த கவிதையை புனைந்தானாம். இதன் பொருள்: “அரசகுல திலகங்கள் மாந்தாதாவும் ராமனும் யுதிஷ்டிரனும் இறந்தபொழுது இந்த பூமி அவர்களோடு போகவில்லை, அட முஞ்சா உன்னோடு போவாள் என்று நினைத்தாயோ?” அழுத்தமான கேள்வி. சொல்லமைப்பும் அற்புதம். துக்கமும் காழ்ப்பும் நீரில் கலந்த உப்பை போன்ற கலந்த தாக்கம்.

பாடலை தமிழில் படித்து, சொல் பொருள் பார்ப்போம்.

மாந்தா⁴தா ச மஹீபதி​: க்ருʼதயுகா³லங்காரபூ⁴தோ க³த​:
ஸேதுர்யேன மஹோத³தௌ⁴ விரசித​: க்வாஸௌ த³ஸா²ஸ்யாந்தக​:|
அன்யே சாபி யுதி⁴ஷ்டி²ரப்ரப்⁴ருʼதயோ யாதா தி³வம்ʼ பூ⁴பதே
நைகேனாபி ஸமம்ʼ க³தா வஸுமதீ முஞ்ஜ த்வயா யாஸ்யதி||

ராமனும் யுதிஷ்டிரனும் இதிகாச புருஷர்கள். இவர்களோடு ஒப்பிட மாந்தாதா யார்? இதுவே பாடலின் மற்றொரு பெருஞ்சுவை. நாம் மறந்து போன வரலாற்றின் ஆழமும் இங்கே மிரட்டுகிறது. துவாபர யுகத்தின் இதிகாச மன்னன் யுதிஷ்டிரன்; திரேதா யுகத்தின் இதிகாச மன்னன் ராமன்; கிருதாயுகத்தின் புராண மன்னன் மாந்தாதா.
கிருதாயுக அலங்கார மஹிபதி (மகாராஜன்) மாந்தாதாவின் உடலும்(பூத) சென்றுவிட்டது(கத). பெருங்கடலில் (மஹோததி) சேது படைத்து தசமுகன் (தஷாஸ்ய) ராவணனை அந்தகம் (மரணம்) செய்தவன் எங்கே (க்வா)?  யுதிஷ்டிரனும் சொர்கம் (திவம்) சென்றான் (யாதா). ஒருவனோடும் (ஏகேன) சேர்ந்து (ஸமம்) ந கதா (போகவில்லை) வஸுமதீ (பூமி). முஞ்சா உன்னோடு (த்வயா) யாஸ்யதி (போவாளோ?)
{ந + ஏகேன + அபி = நைகேனாபி}

ராமாயணம் மகாபாரதம் தெரிந்த அளவு நமக்கு புராணக்கதைகள் தெரிந்திருப்பதில்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டில் அமராவதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டில் போஜன் காலத்திலும் மாந்தாதா நினைவிலிருந்தான்.

இந்த கவிதையும், அந்த முஞ்சன் சம்பவமும் நம்பத்தகாதது என்கிறார் காஞ்சி விஷ்வ வித்யாபீட வடமொழி பேராசிரியர் சங்கரநாராயணன். அதாவது போஜன் இக்கவிதை எழுதினான் என்பதே சந்தேகமானது. இருந்தாலும் மாந்தாதவை பற்றிய அழகான கவிதை என்பதால் எழுதியுள்ளேன். மாந்தாதாவின் பிறவி கதை இதைவிட நம்பகத்தன்மை குறைவானது. இருக்கட்டும்.

சிற்ப வடிவம் மிகவும் அழகு. சபை நடுவே கொலுவீற்றியுள்ள மாந்தாதாவின் கம்பீரமும், செருக்கும், மன்னனுக்கே உரிய தன்னம்பிக்கையும் மிளிர்கின்றன. அவனே பின்னே உள்ள அரசகுல மகளிரும் சாமரம் வீசுவோரும் கூட அதே செருக்கில் மிதக்கின்றினர்; அவன் வலது பக்கமுள்ள பெண்டிர் முகங்களில் மோகமோ காதலோ வியப்போ பொங்குகிறது. அவன் காலடியில் அமர்ந்து பரிசுகொடுப்போரின் மிகவும் தாழ்ந்த நிலையும் மன்னனின் செருக்குக்கு நேர்மாறாக பணிவு ததும்புகின்றன. அதிகாரத்திற்கும் அரசகம்பீரத்திற்கும் கிடைக்கும் மரியாதை இவை. மன்னனின் வலது பக்கத்தில் காணும் ஊரோர் செல்வந்தர் கூனிகுறுகாமலிருப்பினும், பவ்யமாகவே உள்ளனர்.

வேறோரு சிற்பத்தில் புத்தர் போதிமரத்துக்கடியில் சிம்மாசனத்தில் (!) கொலு வீற்றிருக்க அவரை தரிசிக்க வந்த மற்றவர் யாவரும் அச்சமோ மோகமோ இன்றி பக்தியோடு மட்டும் காட்சியளிக்கின்றினர். பெண்டிரை காணவில்லை.

புத்தருக்கும் மாந்தாதாவிற்கும் உள்ள வித்தியாசத்தை காட்டவே அமராவதி சிற்பிகள் இரண்டையும் வடித்துள்ளனரோ?

அமராவதி சிற்பங்கள் இந்திய கலை வரலாற்றில் முன்னோடிகள். அவற்றின் அமைப்புக்கு பல்லவ சிற்பங்கள் கூட போட்டியில்லை என்கிறார் ஓவியர் சந்துரு. இவர்  சென்னை கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர்.


தொடர்புடைய பதிவுகள்


அமராவதியின் நளகிரி சிற்பம் - ஓவியர் சந்துரு (காணொளி)
நகுபோலியன் சிறுகதை - மழ நாட்டு மகுடம்
கல்லிலே ஆடவல்லான் 
பர்த்ருஹரியின் ஒரு கவிதை
Purnagiri - a Tantrapitha
Vaishali

திருத்தம் இதை 18-12-2015இல் முதலில் எழுதிய போது, பாந்துகா சிற்பத்தை மாந்தாதா சிற்பம் என்று தவறாக குறிப்பிட்டிறுந்தேன். இன்று 21-12-2016 திருத்திவிட்டேன்.
பாந்துகா - ஷாஷ்வத் எடுத்த படம்

Tuesday 15 December 2015

Ford Lenin Hitler Chaplin


Lenin admired Ford as one of the great contributors to the twentieth century revolution and it was not unusual to see portraits of  Ford and Lenin hanging side by side in Soviet Union factories.

Adolf Hitler also revered Ford. He proclaimed, "I shall do my best to put his theories into practice in Germany" and modeled the Volkswagen, the people's car, on the model T. In the USA, capitalists like John Rockefeller acclaimed Ford and described his production facilities as the "Industrial Marvel of the Age ." US President Woodrow Wilson asked him to run for Senate as a progressive Democrat.

Leftist artists denounced his impact on  society. Charlie Chaplin satirized mechanical labor in the movie, "Modern Times." Aldous Huxley dated the beginning of "degeneration" on "the year of our Ford."

Yet a survey of American workers found they ranked him above Franklin Roosevelt and Walter Reuther as the modern American leader "most helpful to labor."

--------
The above extract is from the book The Peoples Tycoon by Steven Watts.

The contrast between how intelligentsia (journalists, artists, writers) perceived him - as an idiot and a traitor - and how capitalists, politicians and workers perceived him, is striking. Today, Henry Ford is mostly ignored. Most writers and artists continue think of the car as a perverse polluting dinosaur while ungratefully and hypocritically wanting their own.

I have also been reading Henry Ford's autobiography My Life and Work. It is stunning for its insights on three different fields - engineering, economics and human psychology. I will blog on them shortly. From his autobiography, it seems that Ford was keen on making farming simpler and less brutal and wanted to make efficient machines like tractors for the job. But farmers took no interest in his efforts. It was the general public buying cars in large numbers that eventually persuaded farmers, that internal combustion engines were good for farming. It is Ford, not Diesel and Benz, therefore who should get the credit for what I call the Second Green Revolution.

Related Blogs

Henry Ford - idiot, traitor
Traffic - LMS
On Charles Parsons and turbines

Thursday 10 December 2015

வான் மழை பொய்ப்பினும்


சென்னையில் வெள்ளம். ஆனால் பாரதத்தில் வரட்சி. பிகார் தேர்தல், பசு வதை, ஆமிர் கான், டிப்பு சுல்தான் நாடக அவலங்களில் இது செய்தி இல்லைதான். ஆனால் ஏன் செய்தி இல்லை? டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை விளக்குகிறது. நல்ல செய்தி என்றாலே அலறி ஓடுவோர் படிக்கவேண்டாம். இது என் மொழிபெயர்ப்பு

-------கட்டுரை மொழிபெயர்ப்பு ஆரம்பம்-----
பருப்பு விலை இப்படி அபாரமாக ஏறிவிட்டதே,” என்று என்னை கேட்கும்போது எனக்கு ஆச்சரியம் பொங்குகிறது. மழையின்றி இரண்டு வருடங்கள் வரண்டு வாடியுள்ளது பாரதம். வரட்சி இருந்தும் ஏன் உணவு விலை ஏன் மலை ஏறவில்லை என்றல்லவா மக்கள் கேட்கவேண்டும்!

1965 நான் பத்திரிகை நிருபரானேன். அன்றும் பாரதம் இரண்டாண்டு தொடர்ந்து மழையின்றி வரண்டது. தானிய உற்பத்தி இருபது சதவிகிதம் குறைந்தது; பஞ்சம் பட்டினி நாட்டை வாட்டியது; விலைவாசி விண்ணை முட்டியது. வெட்கக்கேடாக, இந்தியா பரிதாபமாக அமெரிக்காவிடம் உணவுக்கு கெஞ்சியது. “கையிலிருந்து வாய்” வருமை போல் “கப்பலிலிருந்து வாய்” வருமை என்று பேசப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு பின் – இரண்டு தொடர் வரட்சிகளின் பாதிப்பே தெரியாமல், பஞ்சம் பட்டினியில் வாடாமல், பருப்பு விலை ஏறியுள்ளதே என்று கேட்கும் நிலைமைக்கு பிரம்மாண்டமாக முன்னேறியுள்ளோம். 2014-15 புள்ளிவிவரப்படி, 12% குறைந்த மழை பெய்தாலும், வரட்சி இருந்தும், அதை மீறி விவசாய விளைச்சல் சற்றே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 14.3% குறைந்த மழை பெய்தாலும் ஆறு மாதங்களில் விவசாய விளைச்சல் அதிகரித்துள்ளது. தொலைகாட்சி நிருபர் நாடெங்கும் தேடியும் பட்டினியில் வாடும் கிராமவாசிகள் யாருமில்லை. வரட்சி செய்தியே இல்லை!

மழை பொய்ப்பின், விவசாயம் மட்டும் அல்ல, மற்ற உற்பத்தியும் சேவைகளும் அடிபடுவது வழக்கம். நெசவு, சணல், சக்கரை, சமையல் எண்ணை இவை யாவும் விவசாயத்தை நம்பும் துறைகள். விதைத்தல், அருவடை, சாகுபடி, போக்குவரத்து, செக்கு, பொட்டலம், போன்றதொழில்கள் விவசாயம் சார்ந்தவை. பாரதம் சுதந்திரம் வாங்கிய முதல் ஐம்பது ஆண்டில் 45% ஜிடிபி மாற்றம் மழையால் பாதிக்கபட்டது என்று பொருளியலாளர் அரவிந்த வீர்மணி காட்டியுள்ளார்.

1965, 1966 ஆண்டு வரட்சிகளும் பஞ்சமும் கண்ட மேலை நாட்டு நிபுணர்கள், இந்தியா என்றுமே சோற்றுக்கு கையேந்தி வாடும் என்று ஆரூடம் சொன்னார்கள். வில்லியம் பேட்டாக்கும் பால் பேட்டாக்கும் எழுதிய “பஞ்சம் 1975” அந்த வருடம் (எழுதிய பத்து ஆண்டுகளுக்கு பின்) உலகமே பஞ்சத்தில்  வாடும் என்றனர். மேலை நாடுகளின் தானியங்கள் காப்பாற்ற முடிந்த நாடுகளுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும், இந்தியாவை போன்ற காப்பாற்ற முடியாத நாடுகள், அவர்களின் விதிக்கு விடப்படவேண்டும் என்று கூறினர். இந்தியர்கள் கொதித்து குமைந்தாலும், மேற்கத்திய சமூகங்களில் பலர் இக்கருத்தை பாராட்டினர். ”ஜனத்தொகை வெடிகுண்டு” என்ற நூல் எழுதிய பசுமை போராளி பால் எர்லிக், இந்த பேட்டாக் சகோதரர்களை வானளாவி புகழ்ந்தார்.

இன்றோ! இரண்டு வரட்சிகளை அலட்சியமாக கையாளுகிறோம். இந்த மாற்றத்தின் காரணம் என்ன? பசுமை புரட்சியால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தானியங்கள் அதிகரித்தது என்று சிலர் கருதினாலும், உண்மையில் தனிநபர் தானிய அளவு1964 இல் உச்சத்தை எட்டியது; அதன் பின் சரிந்தது. உணவு வினியோகத்தை சரியாக செய்ததால் பஞ்சங்களை தவிர்த்தோம். பஞ்சம் நிலவிய மாவட்டங்களில் அரசின் கிராம வேலை வாய்ப்பு திட்டங்களால், உணவு பொருட்களை வாங்கும் அளவுக்காவது மக்களிடம் செல்வம் வளர்ந்தது. பசியிருந்தாலும் பட்டினியில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் வருமானம் ஏறியது. தானியங்களை தாண்டி, மற்ற உணவுகள் புழக்கமாயின. தனி நபர் தானிய பருகல் குன்றி, எதிர்பாராமல் தானிய மிகுதி உண்டானது. 1990களில் இந்தியா தானியங்கள் வெளிநாடுகளுக்கு விற்கும் அளவு விவசாயம் செழுந்தது. அரிசி ஏற்றுமதியில் இன்று உலகில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது! வரட்சி ஆண்டுகளிலும் உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது. ஒரு கையேந்தி நாடு கண்ட மாபெரும் முன்னேற்றம் இது.

பசுமை புரட்சியால் வரப்புக்கு வரப்பு வயலுக்கு வயல் நெல் உயர்ந்தது. குழாய்க்கிணறுகளால் நீர்பாசன வசதி பெருகி, ராபி பயிர், கரிஃப் பயிருக்கு நிகராக விளைச்சல் தந்தது. பாசன நிலங்கள் அறுபது சதவிகிதம் பெருகின. வான் பொய்ப்பினும் பஞ்சம் தவிர்க்கும் திறன் பெற்றோம்!

முக்கியமாக, இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு லயமாக சரிந்தது. 1950இல் இந்திய பொருளாதாரத்தில் 52% நிலவிய விவசாயம், இன்று 2015இல் 14% ஆக சரிந்தது. சேவைத்தொழில்கள் இந்திய பொருளாதாரத்தில்  60% ஆக கோலோச்சுகின்றன. இத்தொழில்கள் பருவமழையை நம்பி செழிப்பவை அல்ல. தொழிற்சாலை உற்பத்தியும் நெசவு சக்கரை சணல் என்று விவசாயத்தை நம்பும் தொழிலாக இல்லாமல், பொறியியல் ரசாயனம் என்று அகலமாக பரவியுள்ளன.

1970களில் வருமானம் உயர, விவசாய முறைகள் மாறின. தனிநபர் நெல் உற்பத்தி சரிந்து, பால, பருப்பு, எண்ணைகள், சக்கரை, தேயிலை, முட்டை, காய், கனி போன்ற உணவுகளின் உற்பத்தி உயர்ந்தது. சமூகத்தின் அடுத்தக்கட்ட தேவைகளையும் பூர்த்தி செய்தன; உழவர்களின் வருமானத்தையு வளர்த்தன.

மூன்றில் இரண்டாக நிலவிய பாரம்பரிய பயிர்களின் உற்பத்தி பாதியாக சரிந்தது. கறும்பு, நாறு, எண்ணைவிதைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். காய் கனி கோழி மீன் கால்நடை போன்ற மற்ற பாதி, பயிரளவு மழையை நம்பி இல்லை. இதுவே வரட்சியிருந்தும் இவ்வாண்டு விவசாயம் வளர்ச்சி கண்டதன் ரகசியம்.

ஆனால் இதற்கு ஒரு விலை கொடுத்துள்ளோம் - சுற்றுசூழலின் சீரழிவு. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து நிலத்தடி நீர் அபாயகரமாக குறைந்துள்ளது. அரசியல்வாதிகள் உழவருக்கு மின்சார கட்டணம் வசூலிக்க மறுக்கின்றனர். செய்தால் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பது அவர்களது கணிப்பு. சூரிய ஒளி பம்புகளை உழவருக்கு கொடுத்து, மற்ற மின் தேவைகளுக்கு வசூல் செய்தால் இந்த சீரழிப்பு  குறையலாம்.

-------கட்டுரை மொழிபெயர்ப்பு முற்றும்-----


பின்குறிப்பு

செவ்வாய் கிரகணத்திற்கு மங்கள்யான் ராக்கெட் விடுவதை விட, இந்தியர்கள் பன்னாட்டு கம்பெனிகளில் கோலோச்சுவதை விட, ஜனநாயகம் ஓங்கியதை விட, அணுகுண்டு ஏவுகணை சாதனைகளை விட, ஆஸ்கார் நோபல் கிரிக்கட் உலக கோப்பை வென்றதை விட, இது ஒரு மாபெரும் சாதனை.

உழவர் தற்கொலை, வெள்ளச் சேத உயிரிழப்பு, சாலை விபத்தில் உயிரிழப்பு எல்லாம் துன்பக்கேடுகள். ஆனால் கோடிக்கணக்கில் பஞ்சம் பலிவாங்கிய நாட்டில் இந்த முன்னேற்றம் ஈடு இணையற்ற இதிகாச தொடர்ச்சி.

ஜகத்தினில் பசியில்லை, களித்திடுவோம்.


உழவர் தற்கொலை - சுவாமிநாதன் ஐயர் கட்டுரை


பசுமை புரட்சி கட்டுரைகள்

முதல் பசுமை புரட்சி - செயற்கை எரு
இரண்டாம் பசுமை புரட்சி - டீசல் வண்டிகள்
நான்காம் பசுமை புரட்சி - வரப்புயர்த்திய வல்லவன் 

அணைகளும் நீர்பாசன முன்னேற்றங்களும் மூன்றாம் பசுமை புரட்சி என்பது என் கருத்து. அதை பற்றி நான் எழுதவில்லை

Monday 7 December 2015

The few and the many


There are no chosen few
It is that there are but few who choose themselves
There are no silent many
It is that many choose to stay silent
And speak their voice another day.

They also serve who only stand and wait
They also grieve who do not cry at death
Their tears are simply not for public view
They also laugh whose faces seldom smile
Their laughs are sadly few and far between

They also have their dignity
Whom food and shelter lack
They also have their divinity
Whom the Gods and grace have shunned
They also have their several wealths
Whom only poverty has clothed
They also have their several arts
Whom only ignorance has lettered
They also have their honour
Who are humbled by the mighty

The greatest heights that mankinds's thoughts may soar
The awful depths these self-same thoughts might delve
The noblest deeds that by plan or not be done
The basest acts that by force or consent be decreed
These are but tidal lines drawn upon the shore
Till later waves erase and redraw lines anew

There are no finished flows of thought
There are no finished works of art
There are but seeds that people sow
That their sons and daughters may one day know
What they loved and loathed and admired and feared
What was awesome, bold or petty, what inspired, what weird.

Note
I wrote this poem in July 2003. The other poems in my blog are in Tamil.

Erdos on Madras 
An Englishman's tamil inscription 
On human kindness 
Gift of a Magus 
Traffic - LMS 
எடிசன் வாழ்த்து