Sunday 8 November 2015

கல்வி – ஒரு வடமொழி பழமொழி


आचार्यात् पादं आदत्ते पादं शिष्य स्वमेधया ।
पादं सब्रह्मचारिभिः पादं कालक्रमेण च ॥
ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் ஷிஷ்யஸ்வமேதயா
பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச
Aacaaryaat paadam adattE paadam shishyasvamEdayaa
paadam sabrahmacaariBhyaH paadam kaalakramENa ca

பாதம் – கால்
ஆசார்யாத் – ஆசாரியிடமிருந்து
ஆதத்தே - பெறப்படுகிறது
ஷிஷ்ய ஸ்வமேதயா – மாணவனின் சுய அறிவால்
ஸப்ரஹ்மசாரிப்ய: - சக மாணவனிடமிருந்து
கால க்ரமேண – அனுபவத்தால்

கல்வி எப்படி பெறுகிறோம்?

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததோர் கல்வியும் மனப்பழக்கம்”
என்றாள் ஔவை. மேல் கோளிட்ட சமஸ்கிருத பழமொழி கல்வி பெறும் முறையை நான்காய் பிரிக்கிறது.

ஒருகால் ஆசான் கற்பித்தும் ஒருகால் மாணவன் முயற்சித்தும்
ஒருகால் தோழன் சொற்பித்தும் ஒரு கால் காலம் பயணித்தும்”
என்பதே இதன் பொருள்.

நண்பர் சுதர்சனத்தின் தமிழாக்கம்
கானமாசான் காற்றம்மால் காலுடன் உற்றவரால் காலமாசான் மீதிக்கறிவு

பதம் பிரிப்பு
கால் நம் ஆசான் கால் தம்மால் கால் உடன் உற்றவரால்  
காலம் ஆசான் மீதிக்கு அறிவு

வடமொழி கவிதைகள்


கட்டுரை


No comments:

Post a Comment