Tuesday 29 September 2015

உலக பொருளாதார வரலாறு - நூல் விமர்சனம்

ஆலன் பீட்டி எழுதிய போலி பொருளியல்  நூலை செப்டம்பர் 30, புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு, டக்கர் பாபா பள்ளியில், காந்தி மையத்தில், தமிழில் கருத்துரை செய்யவுள்ளேன்.


“ஆச்சிரியமான உலக பொருளாதார வரலாறு” என்று அதற்கு ஆசிரியர், துணைப் பெயரிட்டுள்ளார். போர், புரட்சி, மதம், இயற்கை அழிவுகள், அறிவியல் புரட்சி என்ற காரணங்களால் நாம் அறிந்த வரலாற்று நிகழ்வுகளை மாற்றங்களை போல், பொருளாதார கொள்கைகளும் முடிவுகளும் வரலாற்றை எவ்வழி நடத்தியுள்ளன என்பதை இந்நூல் விளக்கும்.

பருத்தி புரட்சி, மாஞ்செஸ்டர் நூலாலைகள், அதனால் மாறிய ஆங்கிலேய, ஐரோப்பிய, இந்திய வரலாறு, பருத்தி புரட்சியை எதிர்த்த தொழிலாளிகள், சட்டங்கள், வணிகர்கள் பற்றியும் நூலில் உள்ளதை அலசுவேன். ஏன் ஊழல் நேர்மையை வெல்கிறது, நீர் நிலைகளின் ஆளுமை என்ன, வளநாடு தேய்வதும் வரண்ட நாடு வளர்வது, ஏரியும் நதியும் வணிகப்பொருளானதும், நூலின் முக்கிய அம்சங்கள். 

நைல் நதியும் காவிரியும் இந்நூலின் இப்பகுதியை தழுவி நான் எழுதிய கட்டுரை இங்கே

I will review the book False Economy by Alan Beattie, at Gandhi study center, in Thakkar Bapa Vidyalaya, T Nagar this Wednesday September 30 at 6.45 pm. I will speak mostly in Tamil.

This book is subtitled  "A Surprising Economic History of the World" and explains the economic forces and choices shaping the histories of nations or regions. I will select some aspects, only some chapters and explain them in detail.

Among them, I will cover the Cotton revolution, the mills of Manchester, how it altered England, the business, labour and legal resistance to it, first in England, then elsewhere, and how it impacted India a century later. I will also deal with chapters on why corruption sometimes defeats honesty, and water management and mismanagement. Why did Egypt once a source of grain for the Roman Empire become a country importing half its food?

1. An interview with Alan Beattie

2. இந்த உரையின் ஒளிப்பதிவு (video link)

Saturday 26 September 2015

கோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்


கோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம்? வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். அளவோடு பக்தி உள்ளவரும், திருவிழாக்களை காணவும், உற்றார் உறவினர் திருமணம், பிறந்தநாள், வேண்டுதல், மொட்டை, என்று ஏதோ காரணத்திற்கு, சமூக வழக்கத்தில் கோயில் செல்கிறோம். கச்சேரி, நாட்டியம், என்று கலை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாதம் வகையறாக்கள் தான் சிறுவயதில் அதிகம் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ,  சிறுபண்டமோ வாங்குவது

சிறு வயது முதல் நானும் இப்படிதான் கோயிலுக்கு போய் பழக்கப்பட்டேன். சென்னையில் நான் வளர்ந்த மயிலாப்பூரில், அடிக்கடி சென்றது ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் கோவிலுக்கு தான். அந்த கோயில் உள்ளதோ டி.என்.எஸ்.சி வங்கி வளாகம், என் தந்தை அங்கே கணக்கு வைத்திருந்தார். கவிஞர் வாலியின் மகிமையில் சினிமா பாடல் பெற்ற தலமாகிவிட்டது. அங்கே வடைமாலை நாட்கள் கொண்டாட்டம். அதற்கடுத்து நான் வசித்த மயிலை சிஐடி காலனியிலுள்ள விநாயாகர் கோயில். நேரமிருந்தால் ஆழ்வார் பாடிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் அங்கே கல் யானை சவாரியும். அல்லது ஞானசம்பந்தர் பாடிய கபலீசுவரர் கோயில். அறுபத்திமூவர் விழாவையும் தெப்பத்தையும் சில முறை ரசித்ததுண்டு. சுமார் பத்து வயதில் வைதீஸ்வரன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றேன்.

கோயிலின் பிரம்மாண்டம், தொன்மை, வயல்சூழ்ந்த திணை, எல்லாம் அங்கே தான் முதலில் பாடம். கல்லூரி நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றது கல்வெட்டு படிக்கலாம் என்ற ஆசையிலும் பால்கோவா ஈர்ப்பிலும். அறிவியல் ஆர்வத்திலும் வாலிப கர்வத்திலும், கோயில்களின் புனிதமோ கலையோ தொன்மையோ பெரிதாக என்னை கவரவில்லை. அவை இறந்த காலத்தின் சின்னங்களாகவே தெரிந்தன. 

கம்ப்யூட்டரையும் ராக்கெட்டையும் ரோபோட்டையும் விண்வெளியையும் ஏங்கி ஆவலுடன் பார்த்த என் கண்களுக்கு கோயில்கள் சுவாரசியமாய் இருக்கவில்லை. சக மாணவர்கள் பெண்களை பார்க்க மட்டும் கோயில்கள் செல்வது அவற்றை கொஞ்சம் மட்டம் தட்டின. கோயிலுக்கு வந்த பெண்களும் என் கண்களை கவரவில்லை. 

கோயில் மட்டுமல்ல, கலையும் மதிப்பிலா பண்டம் ஆனது. சினிமா இசை மேல் ஒரு சின்ன மோகம் வந்தது, வேகமாய் பெரும் மோகமாக, ஆர்வமாக மாரியது. இளையராஜா மானசீக குருவானார். நண்பன், சக அரைவாசி சிவராம், இசை வழிகாட்டி ஆனான். அவனுடைய ரசனை என் ரசனை ஆனது. தமிழ் புத்தகங்களை நான் படித்ததில்லை, பள்ளிப்பாடமும், குமுதம் ஆனந்த விகடன் துணுக்குகளும், ரெட்டைவால் ரங்குடுவும், சிரிப்பு திருடன் சிங்காரவேலனும் என் தமிழ் இலக்கிய உலகம். ஆங்கிலத்தில் பல நாவல்களை படித்ததுண்டு. ஆங்கில படங்களை தான் ரசித்தேன்; கல்லூரியில் பார்க்கத்தொடங்கிய சினிமா எதுவும் ஈர்க்கவில்லை.

அமெரிக்கா சென்ற பின் குமுதம் வகையறா சுவரொட்டி வகையறா தமிழ் இலக்கியமும் போனது. மேல் படிப்பு முடிந்து, கணினி தொழிலில் ஐந்தாண்டுகள் சென்றன. இயற்கையை ரசிக்க கற்றுக்கொண்டேன். சியாட்டிலிலிருந்து கலிஃபோர்ணியாவுக்கு இடம் மாற நினைத்து, விசா வாங்க மீண்டும் சென்னை வந்த காலம், பொன்னியின் செல்வன் புகழை சிலர் பாடியதால் ஒரு புத்தக கடையில் கல்கியின் காவியம் பொன்னியின் செல்வனை வாங்கினேன். கலிஃபோர்ணியாவில் வாசிக்க எடுத்த பொழுது தான் உணர்ந்தேன். வாங்கியது சிவகாமியின் சபதம்.

பத்து பக்கத்தில் பரஞ்சோதி என்னை கவர்ந்தான். முப்பது பக்கத்தில் நரசிம்ம வர்மன் நண்பனானான். சிவகாமி கண் சிமிட்டினாள். மலைக்கணவாயில் பரஞ்சோதி செல்ல, உடம்பெல்லாம் புல்லரித்தது. யானோ வாசகன்? யானே க்ஷத்திரியன்! புலிகேசி படையுடன் காஞ்சிக்கு வருமுன் மகேந்திர வர்ம பல்லவன், என்னை கைது செய்தான். அடடா! சாகசத்தில் கபில் தேவையும், கலைத்திறனில் இளையராஜாவையும், வீரத்தில் அலிஸ்டேர் மாக்லீன் கதை நாயகர்களையும், நவரசத்தில் லியோணார்டோ டாவின்சியையும், சிந்தனைத்தெளிவில் காந்தியையும் சர்ச்சிலையும் மிஞ்சி, நம் காஞ்சிபுரத்தில் விசித்திரசித்தன் ஒருவன் இருந்தான். இவனை இதுநாள் வரை அறியாமல் போனோமே என்று உள்ளம் நொந்தது.


கபட நாடக கண்ணனை போல் கல்கி சிரித்தார்.

(மனம் வணங்கும் போது தொடரும்...)

Tuesday 22 September 2015

What did Brahmagupta do?

What did Brahmagupta do?

Have you heard of Brahmagupta? Perhaps. Have you heard of Aryabhata? Or Bhaskaracharya? Far more likely! Do you know what they did?

Let me take another approach. Have you heard of Isaac Newton? Surely. James Watt? Charles Darwin? The Wright brothers? Thomas Edison? Galileo? Pythagoras? Archimedes?

Ask a friend (or yourself) what these great people did. Most likely you will get a quick answer.

Newton – Gravity; Laws of Motion
James Watt – Steam Engine
Charles Darwin – Evolution
Wright brothers – Aeroplanes
Edison – Light bulb, phonograph

The average citizen of India, if he has some education, even upto the fifth standard, whether in English medium or other languages, will be able to associate the great scientists named above with their inventions or discoveries. If one asks what else they have done, though, only a few will know, even among college graduates.

With other famous people, gets a little harder. Actually a little vaguer.

Galileo – Telescope?
Pythagoras – his theorem, the hypotenuse, right triangles
Archimedes – water? Density?

These are somewhat vague, but at least you associate them with some of the achievements they are famous for. What did Galileo do with the telescope? Did he discover something? (Reminder: The helio centric theory was proved by Copernicus, not Galileo.) Did Pythagoras propose or prove only one theorem? What else did Archimedes do, before running naked in the streets?

Let me name a few more scientists. Louis Pasteur. Dmitri Mendeleev. Leonard Euler. Antoine Lavoisier. Alexander Humboldt. Fritz Haber. Nikola Tesla. Karl Benz. Nikolaus Otto. Emile Levassor. These names are less famous than the others mentioned earlier, even though their contributions are breathtaking. First, none of them is English or American; Indian education is biased towards the Anglo American world. They are French, German, Russian, Swiss, Serb. Marconi and Einstein are the only recognizable names among non-Anglo European scientists, to most people.

But most well educated people in India will categorize them or recognize their major achievements, at least of Pasteur and Mendeleev.

Now back to my original question.

What did Brahmagupta do?

Astronomy or Mathematics are inadequate answers. You would not answer Physics if when asked what Newton did, Biology for Darwin, or Electricity for Edison.

Aryabhata? Bhaskara? Varahamihira? Nilakantha?

The sad reality, is that most of us know nothing about what these Indian superstars accomplished, except very vague outlines. They are barely mentioned in our school text books; they are ignored in literature, both popular and scholarly; they are merely names to be proud of, not scientists whose work is worthy of study; or even basic awareness. And this would be true, not just of generally educated people, but even among most mathematicians and Sanskrit scholars. What a pity! This is neither a product of the Colonial System, nor deliberate Nehruvian antipathy. Perhaps a general apathy. A numbing lack of curiosity.

I wont answer the questions I have raised, in this essay - What did Brahmagupta do? Or Aryabhata? But this I will say : what they did is far easier to understand than the mathematics of Ramanujan, or the Raman Effect, or Evolution or the Steam engine.

Popular sources on the Internet, (Wikipedia, for example) and even general books on the subject, miss the wood for the trees. I have given a few lectures on Indian Astronomy, and I don’t think I got their accomplishments across. Just a general sense of awe and pride, waiting to be kindled. But easily satisfied with the vaguest phrases.

This essay is not a boast, more a lament. Five years ago, I did not know most of these names, or what they did. Today, I wonder why. This blog is to share the angst.


As a postscript, let me mention these names : Mohammad ibn Musa, al Khwarizmi, ibn Sina, al Hasan, Cai Lun, Shen Kuo. In India, these names will not ring a bell. We know the least about two great civilizations, our oldest neighbours, China and Iran.

Saturday 12 September 2015

அமெரிக்காவின் தலை சிறந்த காபி

தமிழ்நாட்டு ஃபில்டர் காபி அருந்தி பழகியவர்களுக்கு அதன் மேல் அதிக பிரியம் மட்டுமில்லை, ஒரு தனிவிதமான கர்வமும் உண்டு. காபி பழக்கம் வரலாற்றில் மிக சமீபமானதே என்று நம்மில் பலர் அறிவோமில்லை. அறிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனமிறாது; கொஞ்சம் கர்வம்தான். ஃபில்டர் காபி என்றில்லை, எந்த காபியை பற்றியும் இந்த கர்வமுண்டு. தென்னாடுடைய சிவன் மட்டுமா? காபி உடைய தென்னாடு அல்லவா?

காபி, ஒரு அரபிய பானம். நதிமூலம் ரிஷிமூலத்தை போல, காபிமூலம் கேள்விக்குறியது. தேநீரின் சீன வரலாற்றை போல, காபிக்கு ஒரு வரலாறு உருவாகவில்லை. போதிதர்மரின் கண்ணிமை போல் ஒரு வட்டார கதையும் இல்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன் மத்திய ஐரோப்பாவில் அறிவாளிகளின் பானமாக மாறியது. சக்கரை யுகத்திற்கு முன்னரே காபி யுகம் தொடங்கிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தமிழகத்தில் காவிரிக்கு போட்டியாய் காபிநதி பாயத்தொடங்கியது. பிராமண சமூகத்தில் ஆசாரங்களை மீறி, உடைத்து, கௌரவத்தை குறைக்காமல், அந்தஸ்த்தை கொஞ்சம் வளர்க்கும் பொருளானது. வடக்கிந்தியாவை காபி வெல்லவில்லை. தமிழனைக் கேட்டால் பன்ருட்டி பலா, மணப்பாரை முறுக்கு, கும்பகோணம் காபி என்பான். ஆனால் மயிலாப்பூரில் மானமுள்ள மாமா மாமி ஒருத்தரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காபி மயிலையின் ஆஸ்தான பானம்.

பால பால் காண்டம்

நான், காபி அருந்தும் தாய்க்கும் டீ அருந்தும் தந்தைக்கும், மயிலையில் பிறந்த போர்ண்வீட்டா பயில்வான். ஹார்லிக்ஸ் வீவா நியூட்ரமுல் பூஸ்ட் என்ற பால்ய பருவத்து பான பெருங்கடலை கடந்து, பதிமூன்று வயதுக்குள் காபி பழக்கத்தை கற்றுக்கொண்டு, தொண்டைக்கு மஞ்சள் நீராட்டுவிழா கண்ட வித்தகருக்கு நடுவே, பசும்பால் சப்பாணியாக பலவருடம் வளர்ந்துவந்தேன். மற்றவர் இல்லத்தில் வெங்கடேச சுப்ரபாதமோ விவித் பாரதி சஹஸ்ரநாமமோ ஒலிக்க எங்கள் வீட்டில், “கோபு, காபி போட்டு தா, டா”, என்று என் தம்பி ஜெயராமனின் உரிமை குரல் கர்ஜிக்க, கூவம் நதிமிசை வெயிலிலே, சேர நன்னாட்டு டீ புரக்கணித்தே, அரபுவிதை டிகாஷன் கொதித்திடவே, ஆவின் பாலாற்றி அளித்திடுவேன். ராமன் எஃபெக்ட்டை காபியில் பார்க்காவிட்டாலும், காபியின் விளைவை ஜெயராமனில் பார்த்து களித்தேன். ஆனால் கல்லூரி காலத்திலும் சரி, தொழில் செய்த காலத்திலும் சரி, நான் என்றோ எப்பொழுதோ அருந்திய அபூர்வ பானமாகவே காபி விளைந்தது. 

டெக்ஸாஸ் மாகாணத்தில் படிக்க சென்றபோது, சூடாக பால் அருந்தும் பழக்கம் போனது.  அமெரிக்காவில் பாலை சுடவைத்து குடித்தால், கொமட்டும். ஜில்லென்ற பாலில் சீரியோஸ், கார்ன் ஃப்லேக்ஸ் வகையறா சீரியல் சாப்பிட கற்றுக்கொண்டேன்.

காரும் காபியும்

பின் 1994இல் தொழில் செய்ய சியாட்டில் நகருக்கு சென்றேன். சியாட்டில் அமெரிக்காவின் காபி தலநகரம். விமானம் செய்யும் போயிங் கம்பெனி, பின்னர் மைக்ரோஸாஃப்ட், பின்னர் அமேசான், எல்லாம் பிரபலமாகுமுன், அது மரம் வேட்டும், காகிதம் செய்யும் நகரமாக தொடங்கியது. துறைமுகமும் முக்கியம். அங்கே என்றோ காபி கலாச்சாரம், அமெரிக்காவில் எந்த ஊரிலும் இல்லாத அளவு, பெரிதாக தொடங்கிவிட்டது.

முதல் ஸ்டார்பக்ஸ் காபி கடை நிறுவபட்ட ஊர் சியாட்டில். மைக்ரோஸாஃப்ட் சியாட்டில் நகருக்கு அரிசோனாவிலிருந்து இடம் மாறிய பின், உள்ளே அடைந்து கம்ப்யூட்டரை 15 மணிநேரம் பேந்த பேந்த விழித்து பார்க்கும் ஊராக மாறியதை கண்டு, இத்தாலியில் காபி கலாச்சாரத்தையும், அதனால் செழித்திருந்த சமூக உறவுகளையும் கண்ட ஹொவர்ட் ஷுல்ட்ஸ் (கேள்வி: இவர் பெயரை கிரந்த எழுத்தின்றி, தூய தமிழில் எழுதமுடியுமா? சுலுசு? சுலசன்? சூலசேய காபி நாயனார்?), ஒற்றை கடையாய் நின்ற ஸ்டார்பக்ஸை வாங்கி பல கடைகளாக பெருக்கினார்.


எனக்கு பிடிக்காத காபி வகைகள்


காபி கிட்டிய கிட்கிந்தா காண்டம்

Starbucks ஸ்டார்பக்ஸ், Seattle's Best Coffee சியாட்டிலின் பெஸ்ட் காபி, போன்ற கடைகளுள்ள சியாட்டிலுக்கு நான் 1994இல் வந்தேன். ஒரு கார் வாங்கினேன். கல்லூரி காலத்தில் இல்லாத சம்பளமும், காரும் கிட்டியதால் அக்கம் பக்கம் சில நண்பர்களோடு சனி ஞாயிறு பயணங்கள் செய்ய தொடங்கினேன். நீண்ட பயணங்களின் போது மட்டும் பெட்ரோல் கடைகளில் நிறுத்தும் போது, தலைவலி களைப்பு குறைய, காபி அருந்துவேன். வருடம் இரண்டோ மூன்றோ. அவ்வளவே. 

அப்பொழுதெல்லாம் மாலை நேரம் சில நண்பர்களோடும், சக அலுவலர்களோடும் கூடைபந்து ஆடும்பழக்கமிருந்தது. 1997 இல் ஸீக்வெல் ஸெர்வர் SQL Server குழுவிலிருந்து எம்.எஸ்.என் MSN குழுவுக்கு மாறினேன். அங்கே மதியம் கூடைபந்து ஆடும் பழக்கம் வந்தது. சியாட்டிலில் வெயில் இல்லை, மதியம் சுகமாக ஆடலாம். விளையாடுவோருக்கு குளியல் அறையை மைக்ரோஸாஃப்ட் செய்திருந்தது. அங்கேயே குளித்து, மதியம் உணவு அருந்தி, அலுவலகம் சென்றால் திடீரென்று அடித்து தள்ளிக்கொண்டு தூக்கம் வரும். அதை போக்க, காபி அருந்துவேன். வாரம் நான்கு நாள். சுமாரான காபி தான். ஆனால் பழகிவிட்டது.

அதே நேரம், திடீரென்று சியாட்டில் கடையாக இருந்த ஸ்டார்பக்ஸ் அமெரிக்கவெங்கும் பரவி புகழ்பெற்றது. பிறகு உலகெங்கும் பரவியது. ஆனால் அவர்களுடைய காப்புசினோ, மோக்கா, லாட்டே, எஸ்ப்ரெஸ்ஸோ எந்த காபியும் எனக்கு பிடிக்கவில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஃபில்டர் காபி தான் மதச்சார்பற்ற ஆறெழுத்து மந்திரம்.

சுந்தர ஃபில்டர் காபி காண்டம்

அடுத்த வருடம் என் காபி பிரியன் தம்பி ஜெயராமன் டெக்ஸாஸுக்கு படிக்க வந்தான். அதற்கு முன் ஒரு மாசம் என்னுடன் சியாட்டில் வாசம். ஊர் சுற்றி பார்க்க தான். அவன் நல்ல காபி போட்டு அந்த பழக்கத்தை வளர்த்துவிட்டான். நான் மீண்டும் இந்தியா வந்த பின், கூடை பந்தும், கார் பயணங்களும் மறைந்துவிட்டன, ஆனால் காபி பழக்கம் தங்கிவிட்டது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, கலிஃபொர்ணியாவில் காபி மட்டுமே பெரிய குறை. ஜெயராம், டிஸ்னிலாண்ட், ஸீ வர்ல்ட், யூனிவர்சல் ஸ்டூடியோ, விமான் நிலயத்து ஸ்டார்பக்ஸ் கடைகளில் வாளி அளவு காபி வாங்கி, தசரதர் பாயசம் பிரித்தது போல் பிரித்து அனைவருக்கும் கொடுத்து வந்தான். எனக்கோ, அமெரிக்கா, ஃபில்டர் காபியில்லா சபரி மலையாக தோற்றமளித்தது.

சான் ஃபிரான்ஸிஸ்கோவில், சித்தி மகன் விவேக் வீட்டில் தங்கினோம். அவனும் அவன் மனைவி டாமியும் காலையில் தொண்டைகளை தலா ஒரு வாளி கருப்பு காபியில் குளிக்கவைத்துவிட்டே சிற்றுண்டியில்லா சித்தர்களாய் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் ஓடின; நகர்ந்தன.

மூன்றாம் நாள் மட்டும் என்ன நடக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால், நானும் சாண்டில்யன் நாவல் சத்திரியர்களை போல நம்பியிருக்கவே மாட்டேன். யவன ராணிகளும், கடல்புறாக்களும், சீன மாலுமிகளும், வெண்புரவிகளும், பாய்மர கலங்களும், ஜலக்கிரீடைகளும்… அதாவது கன்னிமாடத்தை தவிற எல்லாம் உள்ள சான் ஃபிரான்ஸிஸ்கோவில்….மாலை வேளையில்… இதை எல்லாவற்றையும் விட அதிசயமான…. சைவ உணவுகளை மட்டுமே பரிமாறும் சீன ஹோட்டல். லவிங் ஹட் (அன்பான் குடிசை) அதன் பெயர்.

ஆஹா, சைவ ஃப்ரென்க்சு ஃப்ரைஸ் கிடைக்குமாம், என்ன சந்தோஷம் என்று நான் கேட்க, ஜெயராம் காபி கேட்க, அவர்களும் ஒரு வாளி காபி கொண்டுவர, எனக்கு கைகேயி பகுதி காபி கிடைக்க… தேனோடு கலந்த தெள்ளமுது! கோல நிலவோடு கலந்த குளிர் தென்றல்! ஃபில்டர் காபியை மிஞ்சும் சுவை!



சாய் மில்க் காபியுடன், என் தம்பி ஜெயராமன்


டவுன் பஸ்ஸிலிருந்து ஹீரோ இறங்கினாலும் மிரண்டு மிரண்டு மயங்குவாளே பஞ்சாபி தேன்மொழி பேசும் தமிழ்ப்பட ஹீரோயின், அதை போல் அண்ணலும் மிரண்டேன்; அம்பியும் ருசித்து ரசித்தான். “உங்கள் அஜந்தா ரகசியம் என்ன?” என்று ஆயன சிற்பி போல நாங்கள் வினவ, “சாய் மில்க்” என்றாள் சீன மங்கை. சாய் பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். ஸாய் மில்க்! என்ன டிகாஷண், என்ன பொடி என்றெல்லாம் வீணாக நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. யாம் பெற்ற காபி, பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணதில் இதை பகிற்கிறேன். அமெரிக்காவின் நான் ருசித்த தலை சிறந்த காபி, லவிங் ஹட் கடையில்தான்.

சைவ உணவை பரப்பும் கொள்கையுடன், சில சைவ பிரபலங்களின் படங்களை - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் - லவிங் ஹட் நிர்வாகம், தங்கள் கடை சுவர்களில் பதித்துள்ளது. பார்த்த இடங்களெல்லாம் ஃப்ராங்க்ளின்…



லவிங் ஹட் கடையின் சின்னம்


உலக சைவ உணவு பிரியர்கள் - Loving Hut wall

இதை ஒத்த பதிவுகள்

1. சுவைத்ததும் ரசித்ததும்
2. எழில் மல்கும் அமெரிக்கா (ஆங்கிலத்தில் )
3. SQL Server ஸீக்வெல் செர்வர் நாட்கள் - எண்ணெழுத்தும் கையெழுத்தும்
4. பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு 
5. முயல் கர்ஜனை 
6திருவேப்பம்பாவை




Tuesday 8 September 2015

Pallava Grantha Alphabet in Kanchi Kailasanatha temple

This is a subset of the full alphabet, in the Pallava Grantha script, as inscribed in RajaSimha Pallaveshvaram, better known as the Kanchi Kailasanatha temple. Not every letter is inscribed here. I have included only vowels (swara) and consonants (vyanjana) but not conjunct consonants.

I have cut and pasted individual letters from photos that I have taken. I am neither an archaeologist nor an epigraphist, so there may be mistakes.


Pallava Grantha from mini shrines
with Devanaagari equivalents



Pallava Grantha with Roman / Tamil equivalents

Grantha Consonants Inner wall with Roman 

Pallava Grantha consonants with diacriticals 
with Devanagari equivalents

Notes

27 March 2018
Updated Minishrine grantha alphabets (Devanagari, Tamil/Roman)
Added Inner wall Grantha consonants 

Related Posts

1. Decoding Rajasimha's inscription
2. Calligraphic Nagari in Kanchi Kailasanatha temple
3. Sri RajaSimhaPallaveshvaram - श्रीराजसिंहपल्लवेश्वरम्


Saturday 5 September 2015

ஜோதிட ஆசிரிய பரம்பரை

பண்டிதர் நூலாசிரியர் பாரத குடியரசின் இரண்டாம் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், கிரகோரிய கேலண்டர் முறைப்படி செப்டம்பர் மாதம் ஐந்தாம் நாள், ஆசிரியர்களின் தினமாக கொண்டாட படுகிறது. மாதா பிதா குரு தெய்வம் என்ற பழைய வாக்கில் ஆசிரியர்களுக்கு தொன்றுதொட்டு மரியாதை செலுத்திவருகிறோம். குரு பரம்பரை என்று சிலர் கொண்டாடுவதும் உண்டு. தமிழகத்தில் சிறப்பாக, நாதமுனிகள் தொடங்கி ஆச்சார்ய வைபவமும், சமண மத ஆசிரியர்களின் வரிசையும், கர்நாடக இசை உலகில் குரு பரம்பரையும் ஓரளவு நினைவில் பேணி வருவது வழக்கம்.

இந்திய ஜோதிட (விண்ணியல், வானியல்) நூல்களையும் அதன் கருத்துக்களையும் உரைத்த கே.வி.சர்மாவின் Facets of Indian Astronomy (“இந்திய விண்ணியலின் சில கோணங்கள்”) நூலை 2010இல் படித்தேன். அதில், கேரளத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோவிந்த பட்டதாரிமுதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜராஜவர்மா வரை, ஒரு தொடர்ந்த குருபரம்பரையை சர்மா வரைந்திருந்தார். இவர்கள் கைரேகை, திருமணப் பொருத்தம் பார்க்கும் சாதாரண ஜோதிடர்கள் அல்ல. அத்துறையில் மிகச்சிறந்த முக்கியமான நூல்களை இயற்றியவர்கள்.

பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோண்மனி என்ற நூலை பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றினார். ஏழாம் நூற்றாண்டில் பிரம்மகுப்தர் இயற்றிய பிரம்ம ஸ்பூட சித்தாந்தம் என்ற நூலை தழுவி எழுதப்பட்ட இந்நூல், பாரதம் முழுதும் புகழ்பெற்று, ஜோதிடர்களின் ஆஸ்தான நூலாக நிலவியது. ஆனால் கேரளத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் ஆரியபடர் எழுதிய ஆரியபடீயமும், அதன் வழிவந்த பரஹிதம் என்ற நூலும் கோலோச்சியது. ஆரியபடீயம், பரஹிதம் முன்மொழிந்த முறைகளின் படி கணிக்கப்பட்ட பாதைகளுக்கும், நேரங்களுக்கும், கண்வழியே காணக்கூடிய கிரகங்களின் அசலான பாதைகளுக்கும் அவை வரும் ராசியின் இடங்களுக்கும் வேறுபாடுகளை கண்டு பரபரமேஷ்வரர் என்பவர் த்ருக்கணிதம் दृग्गणितम् என்ற நூலையும், அதன் ஆதார தத்துவத்தையும் எடுத்து சொன்னவர். அதாவது, கணிதம் சொல்லும் இடத்துக்கும் கிரகத்தின் அசலான இடத்துக்கும் கண்கூட வித்தியாசம் தெரிந்தால், கணக்கிலுள்ள பிழைகளை திருத்த வேண்டுமே தவிர, ஜோதிடர்களின் கணக்கிற்கு ஏற்ப கிரகங்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது, என்றார். பார்த்துக் (த்ருக்) கணக்கு (கணிதம்) செய்யும் முறையை த்ருக்கணிதம் என்று பெயரிட்டார்.

இவரது சீடர் வழியில் பின் தோன்றிய நீலகண்ட ஸோமய்யாஜியை, புகழ்பெற்ற ஐரோப்பிய விஞ்ஞானி நிக்கலாஸ் காபர்ணிக்கஸுக்கு (Nikolas Copernicus) சமமாக சொல்லலாம். தந்திர சங்க்ரஹம் என்ற நூலை இயற்றிய நீலகண்டர், பூமியே பிரபஞ்சத்தின் மைய கிரகம் என்ற கருத்தில் மாறுபடாவிட்டாலும், புதன் வெள்ளி கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாக கருத்து உறைத்தார்.

பின்னர் வந்த ஜேஷ்டதேவர், கணித யுக்தி பாஷா என்ற நூலை இயற்றியவர். இவர் முன்மொழிந்த சில விதிகள், குறிப்பாக infinitesimals, கால்குலஸின் விதைகளுக்கு சமம் என்று சிலர் கருதுகின்றனர். இந்த குரு பரம்பரையை கீழ்வருமாறு கே.வி.சர்மா தன் நூலில் செப்பியுள்ளார்.

                 கோவிந்த பட்டாதிரி (1237-96)
சிஷ்யன்   பரமேஸ்வரனின் (1360-1430)
மகன்        தாமோதரன் (13??)
சிஷ்யன்   நீலகண்ட ஸோமய்யாஜி (1443-1555)
சிஷ்யன்   ஜேஷ்டதேவன் (1500-1600)
சிஷ்யன்   அச்யுத பிஸாரடி (1550-1621)
சிஷ்யன்   த்ரிப்பாணிகர பொடுவால் (15??)
சிஷ்யன்   நாவாயிகுலத்து ஆளாடி (16??)
சிஷ்யன்   புலிமுகத்து பொட்டி (1686-1785)
சிஷ்யன்   ராமன் ஆசான்(17??)
சிஷ்யன்   கிருஷ்ணதாஸன் (1756-1812)
சி  மங்கலரி தக்ஷிணாமூர்த்தி மூஸ்ஸது (17??-18??)
சி  நாலேகாட்டில் பாலராமன் பிள்ளை (18??)
சி  இளவரசன் ராஜராஜவர்மா (1812-1846)

தொடர்புடைய பதிவுகள்


3. ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரை – அலமேலு பெரியம்மா ஒலிப்பதிவு